Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. ஆறு மாதங்களுக்குள் முதற்கட்ட குற்றப்பத்திரிகை..!

Advertiesment
ஆம்ஸ்ட்ராங்

Mahendran

, புதன், 24 செப்டம்பர் 2025 (14:09 IST)
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை, மத்திய சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஆறு மாதங்களுக்குள் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த வழக்கு இதுவரை சிபிசிஐடி என்ற மாநில குற்றப் புலனாய்வுத் துறை மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, அரசியல் மற்றும் சமூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருப்பது, வழக்கில் மேலும் வெளிப்படைத்தன்மையையும், நீதியையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் தொடர்ந்து உயரும் வங்கி பங்குகள்! - அந்த அறிவிப்புதான் காரணமா?