Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறுதல் கூற சென்ற எம்.எல்.ஏவுக்கு அடி உதை: கிராம மக்கள் ஆவேசம்!

andhra mla
, ஞாயிறு, 1 மே 2022 (15:45 IST)
ஆறுதல் கூற சென்ற எம்.எல்.ஏவுக்கு அடி உதை: கிராம மக்கள் ஆவேசம்!
 ஆந்திராவில் ஆறுதல் கூறச் சென்ற எம்எல்ஏவை அடித்து உதைத்த கிராம மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
 
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு அந்த தொகுதி எம்எல்ஏ வெங்கட்ராம் என்பவரும் காரணம் என்று கூறப்பட்டது.
 
இந்த நிலையில் எம்எல்ஏ வெங்கட்ராம் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்றார். அவரை பார்த்த அந்த கிராமத்து மக்கள் அவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனையடுத்து போலீசார் பாதுகாப்பாக எம்எல்ஏ வெங்கட்ராமனை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு பயங்கர வெயில்: வானிலை எச்சரிக்கை!