Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம்: எச்சரிக்கும் ஐடி!

180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழக்கும் அபாயம்: எச்சரிக்கும் ஐடி!
, வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (16:37 IST)
180 பான் கார்டுகள் செயலிழந்து போகலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 
இந்தியாவில் தொழில் தொடங்க மற்றும் பல்வேறு பண பரிவர்த்தனைக்கும் பான் கார்டு எண் அவசியமான ஒன்றாகும். பான் கார்டுக்கு விண்ணப்பித்து 20 நாட்களுக்கு பிறகே பான் எண் கிடைக்கும் என்பதால் பலர் பண பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் ஆதார் கார்டு அடிப்படையில் உடனடி பான் எண் வழங்கும் வழிமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது.  பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் எதிர்வரும் 2021 மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமாவதால் 180 மில்லியன் பான் கார்டுகள் செயலிழந்து போகலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துர்கா ஸ்டாலினை திமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்! சுபரமண்யசுவாமி கருத்து!