Publish Date: Thu, 23 Jul 2020 (18:13 IST)
Updated Date: Thu, 23 Jul 2020 (18:15 IST)
நாட்டில் முக்கிய தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் நிறுவனத்திற்கு ரூ.833 கோடியைத் திருப்பிக் கொடுக்கும்படி ஐடி நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வோடபோன் நிறுவனம் அதிகமாக வரிசெலுத்திய வரி 4,759 கோடி ரூபாயைத் திரும்பத் தருமாரு வருமான வரித்துறையிடம் கோடிக்கை வைத்தது.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் ரூ,733 கோடியை திரும்பக் கொடுக்கும்படி வருமான வரித்துறைக்கு உச்ச நீதின்மன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ரூ 833 கோடியை வருமான வரித்துறை திருப்பிக் கொடுக்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில் முறைட்ட நிலையில் , இன்று உச்ச நீதிமன்றம், பிந்தைய நிலுவைக்காத் திரும்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று குறி வருமான வரித்து8றை ரூ. 833 கோடியை வோடபோனுக்கு திரும்பிச் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.