Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிப்புறம் பூட்டு.. உள்ளே 12 முஸ்லீம்கள்.. போலீசார் சோதனையில் திடுக்கிடும் தகவல்..!

Advertiesment
உத்தரப்பிரதேசம்

Siva

, திங்கள், 5 மே 2025 (14:59 IST)
வெளியே பூட்டப்பட்ட ஒரு வீட்டில் உள்ளே 12 முஸ்லிம்கள் இருந்ததாகவும் அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக சில காரியங்களை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட் காவல்துறையினர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் வெளியே பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் உள்ளே சத்தம் கேட்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது கதவை தட்டிய போது உள்ளே சில நபர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே 12 பேர் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
 
வெளியே பூட்டப்பட்ட நிலையில் உள்ளே  நீங்கள் என்ன செய்து கொண்டீர்கள் என்று காவல்துறையினர் கேட்கும் போது சில சட்டவிரோதமான எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை செய்து வந்ததாகவும், இதனை அடுத்து அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தகவல்..!