Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை 2வது நாளாக மீண்டும் உயர்வு.. உச்சம் நோக்கி செல்லுமா நிஃப்டி?

Siva
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (10:06 IST)
இந்தியா பங்குச் சந்தை நேற்று சரிவில் தொடங்கினாலும், ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் உயர்ந்தது. வர்த்தக முடிவில் சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்ததால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதாக வெளியாகிய தகவல், முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.

இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய முதல் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையை நோக்கினால், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் அதிகரித்து 80,455 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 24,036 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், எச்சிஎல் டெக்னாலஜி, எச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments