Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, செவ்வாய், 25 நவம்பர் 2025 (09:37 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று காலை பங்குச்சந்தை சிறிய அளவில் உயர்ந்தது. ஆனால், மதியத்திற்கு மேல் திடீரென சரிந்து முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
 
அதேபோல், இன்றும் பங்குச்சந்தை சிறிய அளவில் உயர்ந்துள்ளதால், நேற்றைப்போல் ஏமாற்றம் தருமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
 
மும்பை சென்செக்ஸ் வெறும் 70 புள்ளிகள் மட்டும் உயர்ந்து, 84,975 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 17 புள்ளிகள் மட்டும் உயர்ந்து, 25,976 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்பல்லோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஜியோ பைனான்ஸ், மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், இண்டிகோ, இன்ஃபோசிஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!