பிள்ளையார்பட்டிக்கு அப்பெயர் வரக் காரணம், இங்கு அருளும் கற்பக விநாயகர் தான். உலகின் ஆதி விநாயகர் வடிவங்களில் ஒன்றாக போற்றப்படும் இச்சிற்பம், இரண்டு கரங்களுடன் காட்சியளிக்கும் தனித்துவமானது. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகர் நின்ற கோலத்தில் இருக்க, இங்குள்ள விநாயகர் அமர்ந்த கோலத்தில், எந்தப் பிந்தைய சேர்க்கைகளுமின்றி அசல் வடிவில் உள்ளார்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் முற்கால பாண்டிய மன்னர்களால் குன்றை குடைந்து உருவாக்கப்பட்ட இந்த குடவரைக் கோவிலில், விநாயகர் சிற்பமும், திருவீசர் லிங்கமும் உள்ளன. கி.மு 500 முதல் கி.பி 1284 வரையிலான 14 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
பாற்கடலில் தோன்றிய கற்பக மரம் போல், கேட்ட வரங்களை அளிப்பதால் 'கற்பக விநாயகர்' எனப் பெயர் பெற்றார். முன்னதாக 'தேசிய விநாயகம் பிள்ளையார்' என அழைக்கப்பட்டார். இவர் கையில் மோதகம் இல்லாமல், யோக நிலையில் லிங்கத்தை வைத்துத் தியானிக்கும் திருக்கோலத்தில் அருள்புரிகிறார். இவரின் வலம்புரித் தும்பிக்கை தனிச்சிறப்பு. வடக்கு நோக்கி அருளும் ஒரே வலம்புரி விநாயகர் இவர் என்பதால், இவரை வணங்குபவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையிலும் சிறப்பு நிகழ்வுகள் உண்டு. கார்த்திகை முதல் தை பூசம் வரை கோவில் காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.