Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருகம்புல் வழிபாடு: கடன் நீக்கி அருளும் ருண விமோசன கணபதி!

Advertiesment
அருகம்புல்

Mahendran

, புதன், 9 ஜூலை 2025 (18:42 IST)
ஆன்மிக வழிபாடுகளில் அருகம்புல்லுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. குறிப்பாக, விநாயகப் பெருமானுக்கும் அருகம்புல்லுக்கும் இடையே பிரிக்க முடியாத ஒரு பந்தம் உள்ளது. விநாயகரின் 54 அவதாரங்களில், 27வது அவதாரமாக விளங்கும் 'ருண விமோசன கணபதி' மிகவும் விசேஷமானவர். 'ருணம்' என்றால் கடன், 'விமோசனம்' என்றால் விடுதலை பெறுதல். ஆக, நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்றே இவரைப் போற்றலாம்.
 
கடன் என்பது பண ரீதியான பிரச்சினைகள் மட்டுமல்ல. நமது முன்னோர்களுக்கு நாம் செய்யத் தவறிய கடமைகளும் கூட கடன்கள்தான். அத்தகைய பித்ரு தோஷங்களில் இருந்தும் இந்த ருண விமோசன கணபதி நம்மை விடுவிப்பார் என்பது நம்பிக்கை.
 
ருண விமோசன கணபதி அனைத்து ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இவரை வழிபடுவதற்காக இவர் இருக்கும் ஆலயத்தைத் தேடிச் சென்றுதான் வழிபட வேண்டும் என்பதில்லை. உங்கள் வீட்டில் உள்ள விநாயகரையே வழிபடலாம் அல்லது அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம்.
 
கடன் சுமை தீர்க்கும் அருகம்புல் வழிபாடு செய்முறை:
 
விநாயகர் வழிபாடு செய்வதற்கு முதல் நாள் இரவு, 16 அருகம்புற்களை (நுனி உடையாமல்) எடுத்து தயிரில் ஊற வைக்க வேண்டும். அருகம்புல் கிடைக்காத சூழ்நிலையில், குறைந்தபட்சம் 3 அருகம்புல்லாவது இருக்க வேண்டும்.
 
அடுத்த நாள் காலை எழுந்ததும் நீராடி, பூஜை அறையை அலங்கரிக்க வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்றிய பிறகு, தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும்.
 
பிறகு, ஒவ்வொரு அருகம்புல்லாக எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் போது, "ஓம் ருண விமோசன கணபதியே போற்றி" எனப் பாராயணம் செய்ய வேண்டும். நீங்கள் ஆலயத்திற்குச் செல்ல விரும்பினால், விநாயகரை மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.
 
இந்த வழிபாட்டைத் தொடர்ந்து 27 நாட்கள் செய்துவர, ருண விமோசன கணபதி உங்களை கடன் சுமையிலிருந்து காத்தருள்வார் என்பது ஐதீகம்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள்! இன்றைய ராசி பலன்கள் (09.07.2025)!