Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருதமலை முருகன் கோவில்.. திருக்கல்யாணம், தேரோட்டம் தேதி அறிவிப்பு!

marudhamalai
, திங்கள், 23 ஜனவரி 2023 (18:21 IST)
தைப்பூச திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 
 
மருதமலை முருகன் கோவிலில் பிப்ரவரி 4ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறும் என்றும் அன்றைய தினமே தேரோட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
பிப்ரவரி 3ஆம் தேதி தங்க  வாகனத்தில் வள்ளி தெய்வானை உடன் முருகன் பிப்ரவரி நான்காம் தேதி காலை 7 மணிக்கு முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
பகல் 12 மணிக்கு தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறும் என்றும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-01-2023)!