Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
ஏடிஎம் ரசீது

Mahendran

, சனி, 18 அக்டோபர் 2025 (18:15 IST)
ஏடிஎம் மற்றும் கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளை 10 வினாடிகளுக்கும் அதிகமாக கையில் வைத்திருப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரசீது காகிதங்களில் 'பிஸ்பெனால் எஸ்' என்ற ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனம் தோல் வழியாக எளிதில் உடலுக்குள் சென்று, ஹார்மோன்களை பாதிக்கக்கூடிய 'மிமிக் ஈஸ்ட்ரோஜன்' கலவையாக செயல்படுகிறது.
 
ஆண்களுக்கு: விந்தணு உற்பத்தியை குறைப்பது, மூளை செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற அபாயங்கள் உள்ளன.
 
பெண்களுக்கு: மார்பகப் புற்றுநோய் அபாயத்தை உருவாக்கலாம்.
 
தொடர்ந்து ரசீதுகளை கையாளும் கடைகளின் ஊழியர்கள் அதிக அபாயத்தில் உள்ளனர்.
 
தவிர்க்கும் வழிகள்:
 
தேவையற்ற ரசீதுகளை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
 
ரசீதை கையாள்வோர் கையுறை அணியலாம்.
 
ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்திய பின், இந்த ரசீதுகளை தொடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?