Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷகீப் அல் ஹசனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்… பின்னணி என்ன?

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (14:33 IST)
வங்கதேசத்தை சேர்ந்த ஆல் ரவுனடரான ஷகிப் அல் ஹசன் அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அந்த அணிக்காக ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

சமீபத்தில் அவர் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மிகப்பெரிய அளவில் கிளர்ச்சிகள் நடந்து ஆளும் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஷகீப் அல் ஹசன் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதனால் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மீது செக் மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு அது சம்மந்தமான விசாரணை நடந்து வந்தது. இது சம்மந்தமாக அவரை நேற்று ஆஜராக சொல்லி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரைக் கைது செய்ய சொல்லி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அவர் தற்போது இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments