Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

Prasanth Karthick
திங்கள், 31 மார்ச் 2025 (12:13 IST)

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் 182 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி சிஎஸ்கேவை 176 ரன்களில் வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக், அணியின் தாமதமான பந்து வீச்சிற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 3 போட்டிகளாக கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக் அடுத்த போட்டியில் கேப்டனாக செயல்பட மாட்டார்.

 

சஞ்சு சாம்சன் இல்லாததால் ரியான் பராக் கேப்டனாக இருந்து வந்த நிலையில் அடுத்த போட்டி முதலாக சஞ்சு சாம்சனே கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார். ஏற்கனவே ரியான் பராக் காலில் ரசிகர் ஒருவர் விழுந்தது, போட்டோ எடுக்க வந்தவர்களின் போனை தூக்கி போட்டது உள்ளிட்ட சர்ச்சைகளை ரியான் பராக் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments