இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஐந்து பேட்ஸ்மேன்கள் சதமடித்தும் இந்திய அணித் தோல்வி அடைந்துள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயமாக அமைந்தது.
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரிஷப் பண்ட் சதமடித்தார். இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் இங்கிலாந்து மண்ணில் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இதன் மூலம் தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார் பண்ட்.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த போது பல்டி அடித்து சதத்தைக் கொண்டாடினார். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என அஸ்வின் பண்ட்டுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் “டெஸ்ட் போட்டி என்பது வேறு. டி 20 போட்டி என்பது வேறு. டெஸ்ட் போட்டிகளில் நம் உடல் அதிக சோர்வடையும். அதனால் இதுபோல பல்டி அடிக்காதீர்கள். இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறியுள்ளார்.