நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர் சி பி அணி. அந்த அணிக்காகத் தொடர்ந்து 18 ஆண்டுகள் விளையாடிய கோலி முதல் முறையாகக் கோப்பையைக் கையில் ஏந்தியுள்ளார். இது அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியில் குதூகலிக்க வைத்துள்ளது.
இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் பட்டம் வெல்லவில்லை என்றாலும் ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு அணியாக ஆர் சி பி அணி உள்ளது. அந்த அளவுக்கு கர்நாடகா தாண்டியும் அந்த அணிக்கு பரவலான ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் இன்று ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூருவில் அந்த அணி வீதியுலா செல்லவுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விதானா சவுதா சாலையில் தொடங்கும் வீதியுலா சின்னசாமி மைதானத்தில் நிறைவடையவுள்ளது.