Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இனி எங்கள யாராலும் தடுக்க முடியாது’ ‘… ராஜஸ்தானை வீழ்த்திப் புள்ளி பட்டியலில் உச்சத்துக்கு சென்ற பல்தான்ஸ்!

vinoth
வெள்ளி, 2 மே 2025 (07:11 IST)
இந்த சீசனின் தொடக்கத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதனால் இந்த ஆண்டு அந்த அணி ப்ளே ஆஃப் செல்வதே சந்தேகமாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாகப் போட்டிகளை வெல்ல ஆரம்பித்து தற்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 217 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரோஹித் ஷர்மா மற்றும் ரிக்கல்ட்டன் ஆகியோர் அரைசதமடிக்க, சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தனர்.

இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளோடு முதல் இடத்துக்கு சென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாகப் பெறும் ஆறாவது வெற்றி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“அவரை ரொம்பக் கொண்டாட வேண்டாம்…பவுலர்கள் உஷார் ஆகிவிட்டார்கள்” –சூர்யவன்ஷி குறித்து கவாஸ்கர்!

“இத்தனை வெற்றிகள் பெற்றாலும் அடக்கத்தோடு இருப்போம்” – மும்பை அணிக் கேப்டன் ஹர்திக்!

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments