Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை… கபில் தேவ் விமர்சனம்!

Advertiesment
ஆசிய கோப்பை

vinoth

, வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (14:16 IST)
ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்து சூப்பர் நான்கு சுற்றுகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான இந்தியா- பாகிஸ்தான் போட்டி சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பில்லாமல் ஒருதலைபட்சமாக முடிந்தது. ஆனால் போட்டியில் நடந்த இன்னொரு சம்பவம்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்திய பேட்ஸ்மேன்கள் போட்டி முடிந்ததும் பாக் வீரர்களோடு கைகுலுக்காமல் நேரடியாக பெவிலியனுக்குத் திரும்பினர். அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்தியக் கேப்டன் கபில்தேவ் “பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. கைகுலுக்குவதோ அல்லது கட்டிப்பிடிப்பதோ அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய அணி கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் கிரிக்கெட் என்பது சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் ஷர்மா மட்டும் கேப்டனாக ‘அதை’ செய்யவில்லை… மனோஜ் திவாரி கருத்து!