Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஷப் பண்ட்டுக்கு நான் போட்டியா?... கே எல் ராகுல் அளித்த பதில்!

Advertiesment
இந்திய அணி

vinoth

, ஞாயிறு, 2 மார்ச் 2025 (07:51 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா , தசைப் பிடிப்புக் காரணமாக விளையாடாமல் போகும் பட்சத்தில் ரிஷப் பண்ட் அவருக்குப் பதில் களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அணியில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பதால் ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் ரிஷப் பண்ட் பற்றி பேசியுள்ள கே எல் ராகுல் “ரிஷப் பண்ட்டுக்கும் எனக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. அவரைப் போல ஆடவும் நினைக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியுசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு!