Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் செல்ல மறுத்தார்களா ரெஃப்ரீ ஜகவல் ஸ்ரீநாத் & நடுவர் நிதின் மேனன்?

Advertiesment
பாகிஸ்தான் செல்ல மறுத்தார்களா ரெஃப்ரீ ஜகவல் ஸ்ரீநாத் & நடுவர் நிதின் மேனன்?

vinoth

, வியாழன், 6 பிப்ரவரி 2025 (09:03 IST)
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் தொடர் தொடங்கும் முன் நடக்க இருந்த கேப்டன்கள் போட்டோஷூட்டுக்கு இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவை அனுப்ப முடியாது என பிசிசிஐ பிடிவாதமாக இருந்தது. அதனால் இப்போது அந்த போட்டோஷூட் நிகழ்வையே ஐசிசி ரத்து செய்துவிட்டது. தொடக்கவிழா மற்றும் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னர் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்திய நடுவர் நிதின் மேனும், போட்டி நடத்துனரான ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோரும் சில காரணங்களை பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத் தொடர்ந்து பல போட்டிகளில் பணியாற்றியதால் ஓய்வு கோரி இந்த தொடரில் இருந்து விலகிக்கொண்டதாகவும், நிதின் மேனன் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாகவும் அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பணியாற்ற மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!