Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

Advertiesment
ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

vinoth

, செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (14:38 IST)
கபில்தேவுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் முக்கியமானவர் ஹர்திக் பாண்ட்யா. ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு அவர்தான் டி 20 அணிக்குக் கேப்டனாக பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கினர். இது குறித்த கேள்விக்கு ஹர்திக்கின் பிட்னெஸ் ஒரு பிரச்சனையாக சொல்லப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா இப்போது கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துகிறார். அவர் ஐபிஎல் கிரிக்கெட் மூலமாகதான் கவனம் பெற்று இந்திய அணியில் இடம்பெற்றார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி முதல் முதலாக ஹர்திக் பாண்ட்யாவை சந்தித்ததைப் பற்றி கூறியுள்ளார். அதில் “மும்பை அணிக்காக திறமையான இளம் வீரர்களைக் கண்டறிய நாங்கள் பல உள்நாட்டு போட்டிகளை பார்க்க சென்றோம். அப்போதுதான் நான் பாண்ட்யா சகோதரர்களைப் பார்த்தேன். அப்போது அவர்கள் மிகவும் ஒல்லியாக இருந்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு வறுமை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நூடுல்ஸ் தவிர வேறு எதுவுமே சாப்பிடவில்லை எனத் தெரிந்தது. அந்த வறுமையான சூழலிலும் அவர்கள் கிரிக்கெட் மேல் தீராக்காதல் கொண்டிருந்தனர். அந்த நிலையில் இருந்துதான் தற்பொது மும்பை இந்தியன்ஸ் அணியை ஹர்திக் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!