Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

Advertiesment
நாளைக்கு ரோஹித் ஷர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு கம்பீரின் மழுப்பல் பதில்!

vinoth

, வியாழன், 2 ஜனவரி 2025 (15:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால். நாளைத் தொடங்கவுள்ள போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த தொடர் முழுவதும் கேப்டன் ரோஹித் ஷர்மா மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சிட்னியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறங்கி ஆடுவார் என்று சொல்லப்படுகிறது. இதனால் ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்த போது “நாளைய போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா?” என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் கேட்க “நாளைக்கு பிட்ச்சைப் பார்த்துவிட்டு அதற்கேற்றவாறு ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்” எனக் கூறியுள்ளார். இதனால் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என்பதை சூசமாகத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனு பாக்கர், குகேஷுக்கு கேல் ரத்னா விருது… துளசிமதிக்கு அர்ஜுனா விருது.. மத்திய அரசு அறிவிப்பு