Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணித் தக்கவைக்கும்- கம்பீர் நம்பிக்கை!

Advertiesment
பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணித் தக்கவைக்கும்- கம்பீர் நம்பிக்கை!

vinoth

, வியாழன், 2 ஜனவரி 2025 (09:19 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸி அணி முன்னிலை வகிக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது என்பதால். நாளைத் தொடங்கவுள்ள போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்த போட்டியை தோற்றால் இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஐந்தாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமன் செய்தால் கோப்பையை இழக்காது. இதனால் இந்திய அணி இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டும்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாகப் பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ”ஐந்தாவது போட்டியை வென்று இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வினோத் காம்ப்ளி!