Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

vinoth
வியாழன், 20 மார்ச் 2025 (14:26 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி 12 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்தது.

இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையாக சுமார் 58 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. இந்தத் தொகையை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் பிரித்தெடுத்துக் கொள்ள உள்ளனர்.

ஆனால் தொடரை நடத்திய வகையில் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 869 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதற்கு நஷ்ட ஈடாக ஐசிசி வெறும் 52 கோடி ரூபாய்தான் அளித்துள்ளது. இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments