Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

Advertiesment
சாம்பியன்ஸ் கோப்பை நடத்தியதால் 860 கோடி ரூபாய் நஷ்டமா…சிக்கலில் பாகிஸ்தான் வாரியம்!

vinoth

, திங்கள், 17 மார்ச் 2025 (14:39 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது. மேலும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் தொடரை நடத்திய வகையில் பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 869 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வீரர்களுக்கான சலுகைகளை எல்லாம் குறைக்க உள்ளதாகவும், போட்டிக் கட்டணங்களை குறைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தளவுக்கு நஷ்டம் ஏற்பட பாகிஸ்தான் தொடரில் இருந்து லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியதும், பாகிஸ்தான் ரசிகர்கள் பெரியளவில் மைதானத்துக்கு வந்து போட்டிகளைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் காரணமாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி சார் இந்தாங்க உங்க கப்..! புண்படுத்துறீங்களே! - வைரலாகும் ஐபிஎல் விளம்பரம்!