Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி தன்னுடைய இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்… அஸ்வின் சொல்லும் காரணம்!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (14:55 IST)
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். மேலும் முதல் முதலாக இந்திய அணியில் ஜெய்ஸ்வால் எடுக்கப்பட்டுள்ளார்.

அவர் ப்ளேயிங் லெவனில் இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை ஜெய்ஸ்வால் விளையாடியுள்ளார். அதனால் அவரின் ஒருநாள் அறிமுகம் என்பது மிகவும் சரியானது என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் எடுக்கப்பட்டது குறித்து ஆதரவாகப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் “ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்க வேண்டும். அப்போதுதான் இடது கை- வலது கை கூட்டணி கிடைக்கும். மூன்றாவது இடத்தில் கில் விளையாட, கோலி நான்காவது இடத்தில் விளையாட வேண்டும். அதன் பின்னர் ராகுல் அல்லது பண்ட், ஆறாவது இடத்தில் பாண்ட்யா என வரிசை இருந்தால் மிகச்சிறப்பாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்த போட்டியும் விளையாடவில்லை… ஆனாலும் ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய ஹிட்மேன்!

ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம்… ஜிதேஷ் ஷர்மாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

மகளிர் உலகக் கோப்பை போட்டிகள்… சின்னசாமி மைதானத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments