Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இடம்பெறாததால் சிராஜ் எடுத்த அதிரடி முடிவு!

vinoth
திங்கள், 20 ஜனவரி 2025 (14:47 IST)
பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானின் கராச்சியில் சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டிகள் தொடங்கி, பாகிஸ்தான், துபாய் என இரண்டு நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த அணியில் பெரிய ஏமாற்றமாக பார்க்கப்படுவது முகமது சிராஜ் எடுக்கப்படாததுதான். அது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “பந்து பழையதாகும் போது அவரின் பவுலிங் எடுபடவில்லை. அதனால் அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங்கை எடுத்துள்ளோ,” எனக் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் சிராஜ் சிறப்பாக செயல்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் சிராஜ்தான். அதனால் அவரை எடுத்திருக்க வேண்டும் என்ற விமர்சங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மீண்டும் தன்னை இந்திய அணிக்குள் கொண்டுவர சிராஜ் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளாராம். ரஞ்சி கோப்பை தொடரில் இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக அவர் விளையாடவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

டி20 போட்டியில் 19 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்..!

இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தொடக்க ஜோடி இதுதான்… வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments