Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

TNPL தொடர்… பந்தை சேதப்படுத்திய அஸ்வின் மீது புகார்… TNPL நிர்வாகம் எடுத்த முடிவு!

Advertiesment
அஸ்வின்

vinoth

, செவ்வாய், 17 ஜூன் 2025 (09:33 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் திண்டுக்கல் அணியின் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தடுத்து இரு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.  சில நாட்களுக்கு முன்னர் நடுவர் உடன் வாக்குவாதம் செய்ததோடு பேட்டையும் க்ளவுசையும் தூக்கி வீசியதற்காக அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மதுரை அணிக்கு எதிரானப் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக (Ball Tampering) மதுரை அணி நிர்வாகம் புகார் ஒன்றை வைத்தது. இதையடுத்து அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சொல்லி TNPL நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் மதுரை அணியால் அப்படி பொருட்படுத்தத் தக்க ஆதாரம் எதையும் சமர்ப்பிக்க முடியாததால் அஸ்வின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என TNPL நிர்வாகம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?