Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம் !

சோமாலியா வான் தாக்குதலில் பொதுமக்கள் பலி: மன்னிப்பு கோரிய அமெரிக்க ராணுவம் !
, செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (22:36 IST)
கடந்த பிப்ரவரி மாதம் சோமாலியாவில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் பொதுமக்கள் சிலர் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின்போது இருவர் உயிரிழந்ததாகவும், மூன்று பேர் படுகாயம் அடைந்ததாகவும் அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி திங்கள்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அல் ஷபாப் என்னும் இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த தாக்குதலில் வாழைப்பழ விவசாயி ஒருவரும், தகவல் தொடர்பு சேவைகளில் பணியாற்றும் ஒருவரும் உயிரிழந்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

''சோமாலியா நாட்டு மக்கள் மீது எங்களுக்கு நிறைய மதிப்பு உள்ளது, நடந்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம் என அமெரிக்காவின் ஆஃப்ரிக்க படை தளபதி ஜென் ஸ்டிஃபன் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா எவ்வாறு அவ்வப்போது பொது மக்கள் தாக்கப்பட்டது குறித்தும் உயிரிழப்பு குறித்தும் அறிவிக்கிறதோ, அதேபோல ஒவ்வொரு அரை ஆண்டிற்கும் இனி அமெரிக்க ஆஃப்ரிக்க படைகளும் பொது மக்கள் உயிரிழப்புகள் குறித்து அறிக்கை வெளியிடும் எனவும் ஜென் ஸ்டிஃபன் கூறினார்.

ஆனால் சோமாலியாவில் நடந்த தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், உண்மையான பலி எண்ணிக்கையை அமெரிக்கா மறைக்கிறது என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - பிரதமர் நரேந்திர மோதி முதல்வர்களிடம் கூறியவை

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி காணொளி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்த பிரதமர் நரேந்திர மோதி, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்களின் செயல்பாடு குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

கொரோனா வைரஸ்: பரஸ்பரம் குற்றம்சாட்டும் சீனா மற்றும் அமெரிக்கா தரப்புகள் - எது உண்மை?

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, இந்த வைரஸ் எங்கு உருவானது, இது எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் மற்றும் சதித்திட்டம் என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் ஆன்லைனில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவின் ``கோழைத்தனமான உயிரி ஆயுதத் திட்டம்'' என்றொரு தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. கனடா - சீன உளவுக் குழு ஒன்று கொரோனா வைரஸை வுஹானுக்கு அனுப்பியது என்ற ஆதாரமற்ற தகவலும் கூறப்படுகிறது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Whats App-ல் ஃபார்வேர்ட் மெசேஜ் குறைந்து வருகிறது…