Publish Date: Tue, 28 Apr 2020 (22:31 IST)
Updated Date: Tue, 28 Apr 2020 (22:33 IST)
வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தாவர்களே இல்லை என்ற போக்கு தற்போது இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மக்கள் அதிகளவு போலி செய்திகளைப் பயன்படுத்துவதால்,அதனைக் குறைக்க வாட்ஸ் ஆப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் பயன்பாடு 70% அளவு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
மேலும் வாட்ஸ் ஆப்பில் ஒரு சமயத்தில் ஒரு சாட்டிற்குதான் குறுந்தகவலை ஃபார்வேர்டு செய்யும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அத்துடன், முதலிலேயே ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு மெசேஜை ஃபார்வேர்டு செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது..