தாய்லாந்து ராணுவத் தாக்குதல்: கம்போடியாவில் புத்தமத துறவிகள் உள்பட 29 பேர் காயம்

Siva
வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:44 IST)
தெற்காசிய நாடுகளான தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. குறிப்பாக, பிரசட் ப்ரீ வியர் என்றழைக்கப்படும் இந்து கோவிலுக்கு இரு நாடுகளுமே உரிமை கோரி வருகின்றன. 
 
கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடியாவில் இன்று மீண்டும் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
கம்போடியாவின் முக்கிய பகுதிகளில் இன்று நடைபெற்ற இந்த தாக்குதலில், கண்ணீர்புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி தாய்லாந்து ராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. 
 
இதில் பொதுமக்கள் மற்றும் புத்த மதத் துறவிகள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments