Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நட்பற்ற நாடுகளுக்கு எரிபொருள், ஆனால்... செக் வைத்த புதின்!

நட்பற்ற நாடுகளுக்கு எரிபொருள், ஆனால்... செக் வைத்த புதின்!
, வெள்ளி, 25 மார்ச் 2022 (08:16 IST)
நட்பற்ற நாடுகளுக்கு ரூபிள் மூலமே மட்டுமே எரிவாயு விற்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 30 நாட்களுக்கு மேலாக படையெடுப்பை தொடர்ந்து வருகிற்டஹு. இதன் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. 
 
ஆம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் மதிப்பு 80-ல் இருந்து 120 ஆக ஆனது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் புதின், அவர் கூறியதாவது, நட்பற்ற நாடுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து எரிவாயுவை விற்பனை செய்யும். ஆனால் அந்நாடுகள் வாங்கும் எரிவாயுவுக்கு ரஷ்ய பணமான ரூபிளில் நிதியை தர வேண்டும் என அறிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்பட 41 நாடுகளை நட்பற்ற நாடுகள் என அறிவித்தது ரஷ்யா என்பது கூடுதல் தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறங்கியதுமே அமோக வரவேற்பு.. ஸ்டாலினுக்கு BMW வழங்கிய துபாய் அரசு!