13 மாதக் குழந்தையை கொடூரமாக கொலை செய்தவருக்கு மரண தண்டனை: விஷ ஊசி போட்டு கொள்ள உத்தரவு

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (08:39 IST)
அமெரிக்காவில் கடந்த 2008 ஆம் ஆண்டு, பிளைய்ன் எலம் என்பவர் தன்னுடைய காதலியின் 13 மாதங்கள் குழந்தையை கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடந்த நிலையில், தற்போது அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்த தீர்ப்பு நேற்று இரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக காதலியின் குழந்தையை சுத்தியலால் அடித்தும், பற்களால் கடித்தும் எலம் சித்திரவதை செய்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments