முரசொலி கட்டுரையால் ரஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா?

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (06:59 IST)
அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரை திமுக குறித்தோ, அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தோ ரஜினி இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் அவரை சீண்டிவிடும் வகையில் முரசொலியில் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்த கட்டுரைக்கு பின் திமுகவுக்கு தான் யார் என்பதை காண்பிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முரசொலி கட்டுரைக்கு முன் வரை 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாத ரஜினிகாந்த், தற்போது இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக முரசொலியில் ஒரு விளக்கம் அளித்தது.

தற்போதைய நிலையில் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரஜினி களமிறங்கினால் நிலைமை தலைகீழாக மாறும் என்று திமுக தரப்பினர்களே அஞ்சுகின்றனர். இதனால் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.2135 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை.. இனி வயநாடு மக்களுக்கு பயமில்லா பயணம்..!

வாட்ஸ்அப்-பில் 'Hi' என்று மெசேஜ் அனுப்பினால் போதும்.. உடனே ஆம்புலன்ஸ் ஓடி வரும்.. தமிழக அரசு

செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? ஜெயலலிதா பாணியில் பேசிய கெளதமி..!

போர் எதிரொலி!.. சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!. மக்கள் அதிர்ச்சி!..

வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..

அடுத்த கட்டுரையில்
Show comments