Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி பற்றிய செய்தி –வருத்தம் தெரிவித்த முரசொலி

ரஜினி பற்றிய செய்தி –வருத்தம் தெரிவித்த முரசொலி
, ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:58 IST)
ரஜினியின் அரசியல் வருகை குறித்து நேற்று வெளியிட்டிருந்த கேலியான செய்திக்கு வருத்தம் தெரிவித்துள்ளது திமுக பத்திரிக்கையான முரசொலி.

ரஜினி சில தினங்களுக்கு முன்னால் ’நான் அரசியலுக்குவந்தால் அதை வைத்துப் பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள். மேலும் இத்தனை வருடங்கள் மன்றத்திற்காக உழைத்ததினால் மட்டுமே ஒருவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.’ என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கையைக் கேலி செய்யும் விதமாக ரஜினி ரசிகன் ரஜினியிடம் கேள்வி கேட்பது போல ஒரு செய்தியை நேற்று முன்தினம் முரசொலி வெளியிட்டிருந்தது. அதில் ‘மன்றத்திற்காக இத்தனை வருடங்கள் உழைத்த தங்களின் உண்மையான ரசிகர்கள் நியாயமானப் பதவிக்கு ஆசைப்படுவதில் என்ன தவறு? தாங்கள் மட்டும் இத்தனை வருடங்கள் சினிமாவில் நடித்ததால் மட்டுமே முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா?. பதவிக்காக அரசியல் இல்லை எனில் பெரியார் போல கொள்கைக்காக கட்சி ஆரம்பித்து இயக்கமாக செயல்படவேண்டியதுதானே?’ எனக் கேள்வியெழுப்பி இருந்தது.
webdunia

இதையடுத்து நேற்று முன்தினம் திடீரென தனது ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினி. ஆலோசனைக்குப் பின் தன்னையும் ரசிகர்களையும் யாராலும் பிரிக்க முடியாது என மற்றொரு அறிக்கையும் வெளியிட்டார்.

ஆனால் இன்று திடீரென ரஜினி பற்றிய அந்த செய்திக்காக வருத்தம் தெரிவித்து இன்றைய முரசொலியில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக உள்ளதென்று கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்படுகிறது.’ என முரசொலியின் ஆசிரியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம் - திவாகரன் பகீர் பேட்டி