Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுடியூபர் மேல் புகார் அளித்த முதியவருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் – நடிகர் மாதவன் கருத்து!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (17:35 IST)
டெல்லியில் சாலையோரக் கடை வைத்து நடத்திவந்த முதிய தம்பதிகளைப் பற்றி வீடியோ எடுத்து போட்டிருந்தார் யுடீயுபர்.

டெல்லியின் மால்வியா பகுதியில் காந்தா பிரசாத் என்ற முதியவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு கடை நடத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த கடையில் வியாபாரம் சரியாக இல்லாததால் வருமானத்துக்கு வழியின்றி தவித்துள்ளனர். இந்நிலையில் இவர்களைப் பற்றி அறிந்த பிரபல யுடியூபர் கவுரவ் வசன் பாபா கா தாபா என்ற பெயரில் வீடியோ தொகுப்பை வெளியிட்டார்.

அந்த வீடியோ வைரலாக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அதைப் பார்த்தனர். பிரபலங்கள், சமூகவலைத்தள குழுக்கள், இளைஞர்கள் என்று பலரும் காந்தா பிரசாத்துக்கு உதவினர். மேலும் அந்த கடைக்கு ஸொமோட்டோ ஆர்டரும் கிடைத்தது. இந்நிலையில் அந்த முதிய தம்பதியினர் இப்போது கவுரவ் வசன் மேல் புகார் அளித்துள்ளனர். அதில் தங்களுக்கு வரவேண்டிய பணத்தை அவர் கொடுக்காமல் தனது வங்கிக் கணக்குக்கே வரும் படி அவர் செய்துகொண்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள நடிகர் மாதவன் ‘ அந்த முதிய தம்பதிக்கு பின்னர் யாரோ இருந்து அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அது யாரென்று நாம் காட்ட வேண்டும். அப்போதுதான் நல்லவர்கள் சில நல்ல விஷயங்களை செய்ய முன் வருவார்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments