Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிற்வன் – மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிற்வன் – மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!
, புதன், 4 நவம்பர் 2020 (16:57 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் ஒருவன் விழுந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் நிவாடி மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது புராபுஜுர்க் என்ற கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த குஷ்வாஹாவின் மகன் பிரஹ்லாத் என்ற 5 வயது சிறுவன் புதிதாக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார்.

கிணற்றில் 100 அடியில் தண்ணீர் உள்ளதால் சிறுவன் எத்தனை அடி ஆழத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அவனை மீட்கும் பணிகள் இன்று அதிகாலையில் இருந்து நடந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்கு பாதிப்பா? கட்டுக்கதைகளுக்கு எதிராக புதிய பிரசாரம்