Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயகர்கள் மீண்டும் வருகிறார்கள்… ஆகஸ்ட்டில் கமல்& மணிரத்னம் பட ஷூட்டிங்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:19 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது.

இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், கமல்ஹாசனும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் முதல் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் திரைக்கதைப் பணிகளை மணிரத்னம் முடித்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு முன்பாக, கமல்ஹாசன் இந்தியன் 2 ஷூட்டிங்கை நிறைவு செய்வார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments