Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

Advertiesment
நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

Mahendran

, வியாழன், 19 செப்டம்பர் 2024 (16:05 IST)
நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் YouTube-ல் பேட்டி அளித்திருந்த டாக்டர் காந்தராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார். பேட்டி கொடுத்ததற்காக வருத்தப்படுகிறேன், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். 
 
தனியார் தொலைக்காட்சிகளில் சினிமா குறித்து பேட்டி அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நடிகைகளின் அந்தரங்கம் குறித்து பல விஷயங்களை டாக்டர் காந்தாராஜ் பேசிக்கொண்டிருந்தார்.
 
இந்த டாக்டர் காந்தாராஜ் மீது நடிகை ரோகிணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆதாரம் இல்லாமல் டாக்டர் காந்தாராஜ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசுகிறார், என்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து நடிகைகளையும் கொச்சைப்படுத்தியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரோகிணி தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராக இருந்த நிலையில், டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். "யாரையும் காயப்படுத்த வேண்டுமென்பது எனது நோக்கம் அல்ல, இருப்பினும் பேட்டி கொடுத்ததற்காக வருந்துகிறேன், மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!