Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதை நல்லா இருந்தா போதும்... ‘அருவி’க்கு கிடைத்த பெருமை

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (18:48 IST)
இன்று முதல் சத்யம் மெயின் ஸ்கிரீனில் ‘அருவி’ படம் திரையிடப்பட இருக்கிறது.


 
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அருவி’. பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்ட  இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் முதற்கொண்டு எல்லாருமே புதியவர்கள், ஓரிருவரைத்  தவிர. வித்தியாசமான கதைக்களம், புதுமையான திரை மொழி என எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்தப் படம்.
 
முதலில் குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்தப் படம், மவுத் டாக் மூலம் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதுவரை சத்யம் மெயின் ஸ்கிரீனில் திரையிடப்படாத இந்தப்படத்தை, இன்று முதல் சத்யம் தியேட்டரின் மெயின் ஸ்கீரினில் கண்டு களிக்கலாம். வார நாட்களில் கூட இந்தப் படத்துக்கு அதிக கூட்டம் வருவதாக தியேட்டர் ஓனர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கதை நன்றாக இருந்தால் போதும். ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என்பதற்கு ‘அருவி’ மிகச்சிறந்த உதாரணம். ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ என சமீபத்தில் வெளியான படங்களைப் பார்த்து மற்ற இயக்குநர்கள் தங்கள் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments