Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்னி டெஸ்ட்டில் மூன்று பேரில் யாருக்கு வாய்ப்பு – நடராஜனுக்கு லக் அடிக்குமா?

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:58 IST)
நடராஜன் சிட்னி டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டு இடம்பிடிப்பாரா என்ற ஆர்வம் தமிழக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இடது முழங்காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்புக் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேனில் அவர் இரு வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக அணியைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பளிகப்படலாம் என சொல்லபடுகிறது. ஆனால் அவருக்கு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லை. மற்ற இரண்டு வீரர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரிடம் அந்த குறை இல்லை. ஆனாலும் நடராஜன் நடந்து முடிந்த ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவர் பெயரும் பரிசீலிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments