Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி: சென்னையில் சிறப்பு ஏற்பாடு!

நாளை முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி: சென்னையில் சிறப்பு ஏற்பாடு!
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (07:55 IST)
நாளை முதல் நாடு முழுவதும் கொரனோ தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசியை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் நாளை முதல் இந்தியாவில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இதனை அடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநில தலைநகரங்களிலும் குறைந்தது மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 
தடுப்பூசி ஒத்திகைக்காக சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 96 ஆயிரம் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டத்தின் நடுவிலும் புத்தாண்டு கொண்டாட்டம்: மெழுகுவர்த்தி ஏந்திய விவசாயிகள்!