Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா - ஜெய்ப்பூர்: டிராவில் முடிந்தது விறுவிறுப்பான போட்டி

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (22:23 IST)
புரோ கபடி போட்டி தொடரின் இன்றைய போட்டியில் ஹரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணியும், பெங்கால் மற்றும் மும்பை அணியும் மோதின
 
இன்றைய முதல் போட்டியில் ஹரியானா மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் சம அளவில் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் மோதின. இரு அணி வீரர்களும் புள்ளிகளை எடுக்க தீவிர முயற்சியில் இருந்த நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவில் இருந்தது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்தபடி இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் எடுத்ததை அடுத்து இந்த போட்டி டிராவில் முடிந்தது
 
 
இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி, மும்பை அணியுடன் மோதியது. மும்பை அணி மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் கடைசி நேரத்தில் சொதப்பியதால் பெங்கால் அணி 29 புள்ளிகளும் மும்பை அணி 26 புள்ளிகளும் எடுத்தனர். பெங்கால் அணி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், ஹரியானா, பெங்களூரு, மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடத்தில் நேற்று இருந்த நிலையில் தொடகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments