Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புரோ கபடி போட்டி: மும்பை அணிக்கு மேலும் ஒரு வெற்றி

புரோ கபடி போட்டி: மும்பை அணிக்கு மேலும் ஒரு வெற்றி
, செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (22:14 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த எட்டு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது 
 
 
ஏற்கனவே 6 வெற்றிகள் 6 தோல்வியடைந்திருந்த மும்பை அணியும்,  நான்கு வெற்றியும் ஏழு தோல்வியும் அடைந்த தெலுங்கு டைட்டான்ஸ் அணியும் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
 
இன்றைய போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த மும்பை அணி சிறப்பாக விளையாடி 41 புள்ளிகள் எடுத்தது. ஆனால் தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் 27 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்றது.  இதனை அடுத்து மும்பை அணி தனது 7வது வெற்றியை பதிவு செய்தது 
 
 
இன்றைய போட்டிக்கு பின் டெல்லி, பெங்கால், பெங்களூரு, ஹரியானா, மற்றும் மும்பை ஆகிய ஐந்து அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன என்பதும் தமிழ் தலைவாஸ் அணி 11வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது – 10 இலங்கை வீரர்கள் விலகல் !