Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

Siva
வியாழன், 20 பிப்ரவரி 2025 (09:15 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தியதால், டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்தரப்பிரதேச மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை கிரண் 51 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி, 19.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து திரில்லிங் வெற்றி பெற்றது. கேப்டன் லான்னிங் அபாரமாக விளையாடி 69 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி, நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே அளவு புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூர் அணி முதலிடம் பிடித்துள்ளது. மும்பை மற்றும் குஜராத் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த உத்தரப்பிரதேச அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments