Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று சாதனை வெற்றி: இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:29 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று முடிவடைந்த பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதுமட்டுமன்றி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி செய்த இந்த வரலாற்று சாதனைக்காக பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், சுந்தர் பிச்சை உள்பட பலர் இந்திய அணியை பாராட்டி வருகின்றனர்
 
இந்திய அணியின் வெற்றி குறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியபோது ’டெஸ்ட் தொடர் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி, எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி ஒவ்வொரு பகுதியிலும் புதிய நாயகன் உருவாகிறான் ஒவ்வொரு முறை அடி வாங்கிய போதும் துணிச்சலோடு எதிர்கொண்டு விளையாடுகிறோம். காயங்களை தன்னம்பிக்கையை கொண்டு வெல்கிறோம். வரலாற்றில் ஆகச்சிறந்த வெற்றி இது என்று கூறியுள்ளார்
 
பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் வீரர்கள் வருங்காலத்திலும் சாதனை புரிய வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ 5 கோடி போனஸ் என பிசிசிஐ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments