Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பு முக்கியம் பிகிலே.. முதன்முறையாக கோப்பையை ஏந்திய நடராஜன்! – வைரலாகும் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:42 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் கோப்பையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ரஹானே போன்ற புதியவரின் தலைமையில் இந்திய அணி இதை சாதித்துள்ளது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை கொண்டு தன் திறமையை நிரூபித்த தமிழக வீரர் நடராஜன்தான் தொடர்ந்து பேசிபொருளாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்தியா கோப்பையை வென்றதை தொடர்ந்து அணியினருடன் முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியபடி நடராஜன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவரது விடாமுயற்சியையும், திறமையையும் பாராட்டி பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments