Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கப்பு முக்கியம் பிகிலே.. முதன்முறையாக கோப்பையை ஏந்திய நடராஜன்! – வைரலாகும் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:42 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் கோப்பையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ரஹானே போன்ற புதியவரின் தலைமையில் இந்திய அணி இதை சாதித்துள்ளது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை கொண்டு தன் திறமையை நிரூபித்த தமிழக வீரர் நடராஜன்தான் தொடர்ந்து பேசிபொருளாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்தியா கோப்பையை வென்றதை தொடர்ந்து அணியினருடன் முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியபடி நடராஜன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவரது விடாமுயற்சியையும், திறமையையும் பாராட்டி பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments