பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

Mahendran
சனி, 18 அக்டோபர் 2025 (10:02 IST)
பாகிஸ்தான் இராணுவத்தால் பக்திஹா மாகாணத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடம்பெறும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 
நவம்பர் 5 முதல் 29 வரை லாகூரில் நடைபெறவிருந்த இத்தொடரிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தத் தாக்குதலை "பாகிஸ்தான் ஆட்சியின் கோழைத்தனமான செயல்" என்று கண்டித்துள்ளது. உயிரிழந்த கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், பொதுமக்களை குறிவைத்த இந்த தாக்குதலை "காட்டுமிராண்டித்தனமானது" என்று வர்ணித்து, ஆப்கன் கிரிக்கெட் வாரிய முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments