Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பதியில் திருமணமான 3 மணி நேரத்தில் பொறியாளர் மாப்பிள்ளை இறந்தது பற்றி?

திருப்பதியில் திருமணமான 3 மணி நேரத்தில் பொறியாளர் மாப்பிள்ளை இறந்தது பற்றி?
, வியாழன், 31 ஜனவரி 2008 (17:24 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் :

இந்த திருமணத்தில் ஜோதிடம் பார்க்கப்பட்டதா இல்லையா என்பதை நம்மால் கூற இயலாது. பொதுவாக ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் இந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்று இருக்கும். எந்த தசா புக்தி நடக்கும் போது திருமணம் செய்ய வேண்டும், எந்த தசா புக்தி நடக்கும் போது செய்யக் கூடாது என்பதெல்லாம் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. குரு பலம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்கிறார்கள். தசா புக்தியைப் பற்றி கவலைப்படுவதில்லை.

webdunia photoFILE
ராகு, கேது புக்தி, சனி தசையில் கேது புக்தி, 8க்குரிய புக்தி, 12க்குரிய தசா புக்தி ஆகியவை நடக்கும் போது திருமணம் செய்தால்தான் இதுபோன்ற அகால மரணத்தைக் கொடுக்கும். மேலும் சந்திராஷ்டமத்திலும் தாலி கட்டக் கூடாது. பெண்ணுக்கோ ஆணுக்கோ சந்திராஷ்டமம் நடக்கும்போது தாலி கட்டுதல் கூடாது.

விபத்துத் தாரை என்று சொல்லப்படுவது உண்டு. சந்திரனை வைத்து அவர்களது நட்சத்திரங்களை கணித்து தாராப் பலன் சொல்வார்கள். தாராப் பலன் இல்லாத நாட்களிலும் திருமணம் செய்யக் கூடாது.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால் மாங்கல்ய தாரணம் நடக்கும் அந்த லக்னத்தில் 7வது 8வது இடங்களில் பாவ கிரகங்கள் இருக்கக் கூடாது. அப்படி ஒரு லக்னத்தில் தாலி கட்டப்பட்டாலும் உடனடி மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது.

சரள லக்னம் என்று சொல்லப்படுகிறது. மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரள குணங்கள் கொண்டவை.

சரள குணங்களாக லக்னங்கள் அமைந்து அந்த லக்னத்தின் 7வது அல்லது 8வது இடங்களில் சனி, ராகு, கேது, சூரியன் போன்ற கிரகங்கள் அமர்ந்திருந்தால் 24 மணி நேரத்திலேயே மரணம் சம்பவிக்கும். இதனை அனுபவத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம்.

அதாவது திருமணம் முடிந்து மணமக்கள் வீடு செல்லும்போது விபத்தில் மரணம் போன்ற செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம். அவை இதுபோன்ற நேரங்களில் நடந்திருக்கும்.

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது அவர்களது ஆயுளை முதலில் பார்க்க வேண்டுமா?

ஜாதகப் பொருத்தம் பார்க்க வருபவர்களுக்கு முதலில் ஆயுள் காலத்தையும் பார்க்க வேண்டும். திருமணத்திற்கான தசா புக்தி இருக்கிறதா என்பது போன்றவற்றையும் பார்க்க வேண்டும்.

அதாவது திருமண பொருத்தம் பார்க்க வரும் ஜாதகத்தில் தற்போது திருமணத்திற்கான தசா புக்தியே நடக்கவில்லை, இந்த ஜாதகத்திற்கு தற்போது அதற்குரிய பலன் வரவில்லை என்று கூறுவோம். ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்று சொல்லிவிடுவோம்.

ஒரு சில வயதான பெற்றோர்கள் தாங்கள் இருக்கும்போதே தனது பிள்ளைக்கு திருமணம் செய்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணி வருகின்றனர். ஆனால் அவர்களிடம் இப்போது திருமணம் செய்து வைத்தால் மரணம் சம்பவிக்கும் என்று கூறுவதில்லை. ஒரு சிலரின் ஜாதகத்தில் தாய்-தந்தை இருவரும் சேர்ந்து அட்சதை போடுவதற்கு வாய்ப்பு இருக்காது. அதுபோன்ற ஜாதகங்களும் உண்டு.

தாய்-தந்தைக்கு இறுதி காரியங்கள் செய்து முடித்துவிட்டுத்தான் திருமணம் செய்து கொள்ளும் யோகம் இருக்கும். எனவே, இதையெல்லாம் அந்த பெற்றோரிடம் சொன்னால் அது அவர்களை பாதிக்கும். எனவே இப்போதைக்கு இவர்களுக்கு திருமணம் வேண்டாம், கொஞ்ச காலத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பிவிடுகிறோம்.

சில ஜாதகங்களில் திருமணம் முடிந்ததும் மரணம் சம்பவிக்கும் வகையிலும் அமைந்திருக்கும். சமீபத்தில் ஒரு ஜாதகம் வந்தது. அவருக்கு அப்படித்தான் இருந்தது. அதனால் அவருக்கு திருமணம் வேண்டாம், சேர்க்கை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவரது பெற்றோர் உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்ததாகக் கூறினார்.

உங்கள் ஜாதகப்படி தாலி கட்டியதும் நீங்கள் இறந்து விடுவீர்கள், அதனால் திருமணம் வேண்டாம். நீங்கள் விரும்பும் பெண்ணுடன் சேர்ந்து வாழுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதன்படியே அவரும் இருக்கிறார். தாலி கட்டாமல் செயினோ அல்லது மோதிரமோ மாற்றிக் கொள்ளுங்கள். சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு அடிக்கடிச் செல்லுங்கள். அங்கு சுவாமி முன்னிலையில் சாமி டாலர் பொருத்திய செயினை மாற்றிக் கொள்ளுங்கள். மாலை மாற்றிக் கொள்வதற்கு பதிலாக செயினை மாற்றிக் கொள்ளுங்கள், போதும் என்று சொல்லிவிட்டேன்.

அதாவது அவரது ஜாதகத்தில் 7வது வீட்டில் சனி, 8வது வீட்டில் ராகு, 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளது. இந்த சேர்க்கையில் முதலில் அட்சதைப் போட்டால், உடனடியாக வாய்க்கரிசி போடும் நிலை ஏற்படும் என்பதை அவரிடம் விளக்கமாகக் கூறினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

மரணம் என்பது விதிக்கப்பட்ட ஒன்று, அதனை இவ்வாறு தவிர்க்க இயலுமா?

முடியும். திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று என்று நாம் கருதுகிறோம். ஆனால் திருமணம் முடிந்ததும் இறந்துவிடும் ஜாதகங்கள் இருக்கும் போது திருமணத்தை தள்ளிப்போடுவதால் இறப்பையும் தள்ளிப்போடலாம்.

இயற்கையில் அவ்வாறு செய்ய முடியும். அதாவது மரணத்தைத் தள்ளிப்போட தள்ளிப்போட அது வேறு யாரையாவது எடுத்துக் கொண்டு மரணத்தை சமனிலை செய்து கொண்டே இருக்கும். புட்டபர்த்தி சாய் பாபா வாயில் இருந்து செயினை எடுக்கிறார் என்றால், அது எங்கோ ஒரு இடத்தில் இருந்துதான் வருகிறது. இல்லாத ஒன்று புதிதாக தோன்றி வருவதில்லை. எதாவது ஒரு நகைக் கடையில் இருந்துதான் அது வருகிறது. பின்னர் அது சரிகட்டப்படும். அதுபோன்றுதான் மரணமும்.

இதற்கு உதாரணமாக ஒரு சில வீடுகளில் திடீரென விலங்குகள் இறக்கும். அதனை அந்த வீட்டிற்கு வந்த ஏதாவது துர் மரணத்திற்கு அந்த விலங்கு இறந்துவிட்டது என்று சொல்வார்கள். இதனால்தான் கிராமங்களில் இறப்பு விகிதம் குறைவு. அவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர். ஆடு, மாடு, நாய் என்று பலவற்றை வளர்ப்பதால் அவர்களை தாக்க வரும் மரணத்தை ஆடு, மாடு, நாய்கள் ஏற்றுக் கொண்டு இறக்கின்றன.

மாட்டுக் கண்களில் கண்ணீர் வடியும்போதே ஏதோ ஒரு துர்மரணம் நிகழப்போகிறது என்று தெரிந்து கொள்வார்கள். எஜமானனை நோக்கி வரும் மரணத்தை இந்த விலங்குகள் போராடி தங்கள் உயிரைக் கொடுத்து எஜமானனைக் காப்பாற்றும்.

இது நகர வாழ்க்கையில் மிகக் குறைவு.

Share this Story:

Follow Webdunia tamil