Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து: குடிபோதையில் சென்றாரா?

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:04 IST)
நடிகை யாஷிகா சென்ற கார் சென்னை நுங்கம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற அடல்ட் காமெடி படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்த யாஷிகா, அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
 
இந்த நிலையில் நேற்றிரவு யாஷிகா தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் இருந்தவர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்த கார் நுங்கம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஒரு கடையில் மோதி நின்றுள்ளது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து நடந்த சில நிமிடங்களில் யாஷிகா மட்டும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது
 
இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் காரை ஓட்டியது யாஷிகாவா? என்பது குறித்தும் அவரும் மது அருந்தியிருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்