Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-மகத்: போட்டியாளர்களுக்கு அறிவுரை

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-மகத்: போட்டியாளர்களுக்கு அறிவுரை
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (09:17 IST)
பிக்பாஸ் வீட்டில் தற்போது கவின், முகின், தர்ஷன், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய ஆறு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வார எவிக்சன் பட்டியலில் முகின் தவிர அனைவரும் இருக்கின்றனர் என்பதும் இவர்களின் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மூவர் மட்டுமே முகினுடன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று சிறப்பு விருந்தினர்களாக கடந்த சீசனில் போட்டியாளர்களாக மற்றும் யாஷிகா ஆனந்த், மகத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.  இருவரையும் உற்சாகத்துடன் வரவேற்கும் போட்டியாளர்களுக்கும் யாஷிகாவு, மகத்தும்
சில அறிவுரைகளை கூறி வருகின்றனர். குறிப்பாக டாஸ்குகளை நன்றாக செய்யுங்கள் என்றும், பிக்பாஸ் முடிந்து வெளியே வந்தவுடன் மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் அறிவுரை கூறுகின்றனர் 
 
 
ஆனால் இருவரது அறிவுரைகளை போட்டியாளர்கள் சீரியசாக கவனித்த மாதிரி தெரியவில்லை. குறிப்பாக யாஷிகா மற்றும் மகத் ஆகிய இருவரையும் கவின் கண்டு கொள்ளாமலேயே இருந்தார். இன்று முழுவதும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் இருப்பார்கள் என்றும் நாளை முதல் இந்த வாரத்தின் வழக்கமான டாஸ்குகள் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிரஞ்சீவியின் காலில் விழுந்த விஜய்சேதுபதி !